குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

12 June, 2009

படித்ததில் : பிடித்தது

''தண்ணீரிலே தோன்றி தண்ணீரில் மறைகின்ற
தாமரை இலைத் தட்டிலே !

தத்தளித்து உருள்கின்ற நீர்முத்துப் போல்
தவிக்கின்ற மனித வாழ்வு !

கண்ணீரிலே தோன்றி கண்ணீரிலே முடியும்
கதையினை உனர் நெஞ்சமே

காரிருளில் இடிமின்ன லொடு தோன்றி மறைகின்ற
காளான்கள் போன்ற தன்றோ !

புண்ணீரும் வடிகின்ற சீழ்குருதி நோய்முட்டை
புழுக்கூட்டம் துளைக்கு தம்மா!

புன் புலால் யாக்கையில் வேதனையும் சோதனையும்
புகுந்து அரி
க்கின்ற தம்மா !

எண்ணாமல் காலத்தை ஓட்டுகிற நெஞ்சமே !
இறைவனைச் சிந்தையில் வைப்பாய் !

ஏகாந்த இறைவனை எப்போதும் கொண்டாடு மனமே நீ !

நன்றி :
ஏகாந்த இறைவனை சிறப்பிக்கும் தளங்களுக்கு.

No comments: