குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

14 May, 2010

பிண்ணாக்கு சித்தர் _/\_ 2

வளரும் என் வருகை... பிண்ணாக்கு சித்தர் பாடல்களுடன்...

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே.7

நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே.8

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள்.9

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி.10

பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி.11

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி.12

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி.13

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே.14

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி.15

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே.16

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி.17

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன.18

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு.19

அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே.௨0

பிண்ணாக்கு சித்தர் தாள் போற்றி !

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

7 comments:

Anonymous said...

his Samadhi is at Chennimalai, Erode.

snkm said...

சித்தர் பாடல்கள் அனைத்தும் அருமை, ஞானம் புகட்டும்! இறைவனடியிலும் சேர்க்கும்!

தேவன் said...

// Anonymous said... //

அனாமிக்கு நன்றி, இரு வேறு சித்தர் என்பதால் இந்தப் பதிவில் அதை குறிப்பிடவில்லை. வருகைக்கு நன்றி.

தேவன் said...

/// snkm said... ///

ஒப்புமை இல்லாத உயர்வை பாராட்டியமைக்கும், வருகைக்கும் நன்றி ஐயா

jagadeesh said...

இவரது சமாதி, திருப்பூரிலுள்ள சென்னிமலையில் உள்ளது.

தேவன் said...

@ ஜகதீஷ்

ஒரே பெயரில் இரு வேறு இருப்பதால் அதனை தெரிவிக்கவில்லை. எனினும் பகிர்ந்தமைக்கு நன்றி ! கருத்திட்டமைக்கும் நன்றி !!

nandakumar07 said...

நல்லதை கண்டேன் நன்றி