குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

20 February, 2010

[யாருக்கு ஞானம்...]

இதோ ஒன்று ஞானப்பாடல் ....

கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே !

-சிவவாக்கியார்.

இந்தப் பாடலின் கருத்தை கூற வேண்டியதில்லை .....

எவ்வளவு தெளிவும், துணிவும் இருந்தால் இந்த வரிகள் பாடலாக வரும். இந்த அளவிற்கு ஞானத்துணிவு அனைத்து சித்தர்களிடமும் இருக்கிறது. காரணம் என்ன?

சமயங்களையும், அதற்காக அடித்துக் கொண்டு சாகும் சாமானியர்களையும் காக்கும் பொருட்டு மட்டும் இதை அவர்கள் குறிப்பிடவில்லை. உண்மையின் உச்சத்தை தன் வரிகளில் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

சரி ஒரு நிகழ்வு ....

ஒரு முறை ஒரு ஞானியிடம் ஒரு பக்தர் ஒருவர்..

"சுவாமி ஞானம் பெறுவதற்கு நான் தகுதி உடையவனா? " என்று வினவினார்..

" நீ உயிரோடு இருக்கிறாயா?" என்றார் ஞானி.

அந்த பக்தர் அதிர்ந்து போய்...

"சுவாமி நான் உயிரோடு தான் இருக்கிறேன். அதில் என்ன சந்தேகம்?" என்றார்.

"அப்படியானால், ஞானம் பெறுவதற்கு தேவையான தகுதி அதுதான்" என்றார் ஞானி.

அந்த ஞானி வேறு யாருமல்ல திருவண்ணாமலையில் வாழ்ந்த பகவான் ரமண மகரிஷி அவர்களே..

சந்திப்போம் நல்லோர்களை சிந்திப்போம்...

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

1 comment:

Anonymous said...

Wonderfull!!