குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

28 February, 2011

மகா அவதார் பாபாஜி - 1

பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1214ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1214 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார். ( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)


கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது. இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார்.

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார். பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)

குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார்.

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி உள்ளதால். அவர் தோன்றி 1800 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாகவும் கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வாவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். இந்த தெய்வீக ஞானத்தை பெற்றிடும் மக்கள் இதை யாரிடம் இருந்து பெற்றோம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் கூட கிரியாயோகப்பயிற்சியை அளித்து வருகிறார்கள்.


கிரியா யோகப்பயிற்சியை லாஹிரி மகாசாயா மூலம் உலகம் முழுவதும் பரவச்செய்ய பாபாஜி முடிவு செய்துவிட்டார். ராணுவத்தில் பணி செய்து கொண்டிருந்த மகாசாயா பாபாஜியின் மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.

மகாசாயா
தொடரும்...

17 comments:

jagadeesh said...

nice..

Kavinaya said...

பாபாஜியைப் பற்றி படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

snkm said...

nice! nandri!

Anonymous said...

I was waiting for details on Maha Avatar Babaji as I too get his blessings and I totaly believe in him.

GREAT :

KRIYA YOGI MAHA BABAJIYE NAMAHA!!!

Siva chakra said...

hi,

Very useful post...

Thanks..

தேவன் said...

jagadeesh said...
கவிநயா said...
snkm said...
Anonymous said...
chakra said...

உங்களின் அனைவரின் வருகைக்கும் நன்றி நெஞ்சங்களே...

இராஜராஜேஸ்வரி said...

அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

பாபாஜியைப் பற்றி தெய்வீகத்தகவல்ளை
சிறப்பாக அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

தேவன் said...

நன்றி பாபாஜிக்குத்தான் நான் ஒரு கருவியே! பாபாஜி திருவடி போற்றி.

தாங்கள் வருகைக்கு நன்றி! இராஜராஜேஸ்வரி அவர்களே.

Anonymous said...

blessed are those who read about babaji -

தேவன் said...

//Anonymous said... //

Yes, you told the truth.

surya said...

after reading about mahavatar babaji,meditate with him.if u truely beleive him,he will be with u.you all will be blessed by him.

தலைமை வேண்டி... said...

//அவருக்கு 11 வயதானபோது கி.பி.1216ல் இலங்கை // இதனை மாற்றுங்கள் , தட்டச்சுப்பிழை! 2014 என்றிருக்க வேண்டும்!

Grover Ben said...

ffgf

yoga tips for weight loss said...


Daily yoga practice at home can help you stay healthy, more productive, calm and happy all day. Besides, these benefits are not just for you to enjoy. Doing these practices at home will not only keep you happy but your family members too will be able to feel the positive energy and happiness around. What’s more, you get a chance to practice them right in the comfort of your home, any time you wish.For tips to keep in mind as you prepare yourself for a fun yoga practice at home.

Unknown said...

திரு

Unknown said...

திரு .ரஜினிகாந்தின் அவர்களின் BABA திரைப்படத்தின் மூலமே பாபாஜியை முதன்முதலில் நான் அறிந்தேன் அதன்பிறகு இந்த பதிவு எனக்கு பல தகவல்களை கொடுத்திருக்கிறது மகிழ்ச்சி.

Blogger said...

This way my partner Wesley Virgin's adventure launches with this shocking and controversial video.

As a matter of fact, Wesley was in the military-and shortly after leaving-he discovered hidden, "SELF MIND CONTROL" secrets that the government and others used to get everything they want.

As it turns out, these are the same SECRETS many celebrities (notably those who "became famous out of nothing") and elite business people used to become rich and successful.

You probably know that you only use 10% of your brain.

That's really because the majority of your brainpower is UNCONSCIOUS.

Perhaps that expression has even occurred INSIDE your very own mind... as it did in my good friend Wesley Virgin's mind seven years ago, while riding an unregistered, trash bucket of a car with a suspended driver's license and with $3.20 on his debit card.

"I'm so fed up with going through life paycheck to paycheck! When will I become successful?"

You've taken part in those thoughts, right?

Your very own success story is waiting to start. All you need is to believe in YOURSELF.

Watch Wesley Virgin's Video Now!