குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

09 June, 2009

வாழ்வோம் : வளம்பெற

தீவபுரி என்ற நாட்டை மன்னன் மதிவாணன் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் குற்றங்களை ஒழித்து செழிப்பான ஆட்சி மலர என்ன செய்யலாம் என்று அமைச்சர்களை கூட்டி ஆலோசனை நடத்தினான். ஆலோசனயின் முடிவில் நாட்டில் குற்றங்களை ஒழிக்க வேலை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் உழைத்து உண்ண வேண்டும். வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் படி நாட்டில் முரசு அறிவித்தான்.முரசு அறிவிப்பை கேட்ட மக்கள் தத்தம் வேலைகளை சரியாகவும் முதியோர் தன்னால் முடிந்த வேலைகளையும் செய்து (அரசனின் அறிவிப்பிற்க்காகவும் பயந்து ) வந்தனர்.இதனால் நாட்டில் வறுமை ஒழிந்து நல்லாட்சி மலர்ந்தது. தான் இயற்றிய சட்டம் ஒழுங்காக நடை பெறுகிறதா? என்று மாறு வேடத்தில் மந்திரிகளுடன் சென்று பார்வையிட்டார். ஒற்றர்கள் மூலமாகவும் வேலை இல்லாமல் திரிபவர்களை கைது செய்து மரண தண்டனை விதிக்கும் படி உத்தரவிட்டார்.


........
நாட்கள் பல சென்றன. மாதங்கள் உருண்டோடி வருசங்கள் ஆயின.

மாலை மங்கி இரவு வரும் நேரம் பக்கத்து நாட்டில் இருந்து தேவபுரிக்கு வழிப்போக்கன் ஒருவன் வந்தான். காலார நடந்து வந்ததில் களைத்த அவன் ஊர் எல்லை புறத்தே உள்ள கோவில் வந்து சேர்ந்தான். அவன் வந்த நேரம் அந்த கோவிலில் இரவு கால பூஜை நடந்து கொண்டு இருந்தது. பூஜை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது . கோவிலில் பூஜை முடிந்து அனைவரும் தத்தமது வீடுகளுக்கு சென்றனர். வழிப்போக்கன் நாட்டிற்கு புதியவன் ஆகையால் அவன் அந்த கோவிலில் படுத்து இரவு பொழுதை கழித்தான்.


மதி சோர்ந்து ஞாயிறு வரும் வெலையில் கோவில் பூசாரி வந்து கோவிலை திறந்து சுவாமிக்கு அபிசேகம் எல்லாம் செய்து கிளம்பினார். அவர் கிளம்பும் வேலையில் வழிப்போக்கன் எழுந்து சென்று முகம் கழுவி அவர் முன் நின்று திருநீறு அணிந்து பகவானை தொழுதான் இவன் தொழுவதை பார்த்த பூசாரி இறைவனுக்கு படைத்த பிரசாத உணவில் அவனுக்கு கொடுத்தார் அதை வாங்கி உட்கொண்ட பின் அவன் அமர்ந்து த்யானத்தில் ஈடுபடலானான் மதியமும் இதைபோலவே கழிந்தது மாலை வேலையில் மறுபடியும் பூசாரி வந்து இறைவனுக்கு அபிசேகம் செய்ய வந்த போது இவன் கோவிலில் இருப்பதை பார்த்த பூசாரி என்னப்பா ஊருக்கு புதுசா கோயில்லேயே நாள் முழுவதும் இருக்கிறீயே என்று கேட்டார். ஆமாங்க நான் சேதுபுரியில் இருந்து வந்திருக்கேன் ஒரு வழிப்போக்கன் ஊரு ஊரா சுத்துறதுதான் என் வேலை என்றான்.இது போல் இரண்டு நாட்கள் சென்றன. பூசாரி கோவிலில் வழிப்போக்கன் ஒருவன் வேலை செய்யாமல் இருப்பதை மற்றொருவரிடம் கூறினார்.இது ஒற்றர்களின் காதிற்கும் போனது, இது இப்படியே மன்னரின் காதிற்கும் போனது இதை அறிந்த மன்னன் கடும் கோபம் கொண்டான்.கோபம் கொப்பளிக்க ஒற்றர்களிடம் அவனை இங்கு இழுத்து வாருங்கள். மக்களை பயமுறுத்தி எல்லோரையும் குற்றமில்லா வாழ்வு வாழ வைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் எவேனோ ஒருவன் வந்து அதனை கெடுப்பதா ? என்று கத்தினார்.
ஒற்றர்கள் விரைந்து கோவிலுக்கு சென்று அவனைகைது செய்யலாம் என்றெண்ணியபோது அவன் ஆழ்ந்த த்யானத்தில் இருந்ததை பார்த்து கண் விழித்த போது கைது செய்யலாம் என்று காத்திருந்தனர்.


அவன் த்யானத்திலேயே இரண்டு நாட்கள் இருந்ததால் இச்செய்தியும் மன்னனின் காதிற்கு சென்றது. இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாம் நாள் அரசனும் கோவில் வந்து சேர்ந்தான், அரசன் தன் மனதில் இவன் தான் இயற்றிய சட்டத்தை மீறி நடந்த முதல் குற்றவாளி ஆகையால் இவனை எப்படியும் கடும் தண்டனைக்கு உட்படுத்தி ஆக வேண்டும் என கருதி இருந்தான். இதனால் அரச வருகையினாலும் தண்டனையை காணவும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மூன்றாம் நாள் மதியத்தில் கண் விழித்த வழிப்போக்கன் தன் முன் இத்தனை பேர் கூடியிருப்பதை பார்த்து அதிசயித்துஎளுந்தான். எழுந்தவுடனேயே "கைது செய்யுங்கள் அவனை" என்று மன்னன் ஒற்றனை பார்த்து கூறினான்.

நடந்ததை கண்டு பதற்றபடாத அவன் மன்னனை பார்த்து எதற்காக என்னை கைது செய்கிறீர்கள் என்று கூறிவிட்டு கைது செய்யுங்கள் என்றான்.இப்போது மந்திரி பேசலானார்; நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தை மீறியது முதல் குற்றம் நாட்டின் மன்னனேயே காக்க வைத்து இரண்டாவது குற்றம் என்றார். நாட்டில் என்ன சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்றான்.நாட்டில் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை கொடுப்பது அரச கட்டளை என்றார் மந்திரி . நான் சோம்பேறி அல்லவே, சோம்பேறி அல்ல என்றால் எதற்காக இரண்டு நாட்கள் இதே இடத்திலேயே அமர்ந்து இருக்கிறாய் என்றார் மன்னர்.மனதை அடக்கி அதில் மகேசனை குடி வைக்க காத்திருந்தேன் இது சோம்பேறி செயலல்ல மன்னா! முடிந்தால் ஆட்டம் போடும் உங்கள் உடலையும், மனதையும் இன்று ஒரு நாள் எவ்வளவு நேரம் அடக்கி வைக்கிறீர்கள் என்று பார்ப்போமா என்று போட்டிக்கு அழைத்தான்.


சும்மா இருப்பது ஒரு வேலையா என்று போட்டிக்கு தயாரானார் மன்னர்.மன்னா ஒரு நிபந்தனை போட்டியில் அடியேன் செயித்து அடியேன் நீங்கள் விரும்பியது போல் எனக்கு மரண தண்டனை விதிக்கலாம் ஆனால் நான் செயித்து விட்டால் நீங்கள் எனக்கு என்ன உபயம் செய்வீர்கள் என்றான். என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்ற மன்னன் போட்டியின் படி சும்மா இருக்க (கண் மூடி தவம்) தொடங்கினான். கண் மூடியபடி வழிப்போக்கணும் த்யானத்தை தொடர்ந்தான் கண் மூடிய பதினைந்து நிமிடத்தில் உடல் வலியால் வெகுண்ட மன்னன் தவத்தை கலைத்தான். மன்னன் விழித்ததை உணர்ந்த வழிப்போக்கன் த்யானத்தை கலைத்து என்ன மன்னா இவ்வளவு நேரம்தான் உங்களால் முடிந்ததா ? நான் இன்னும் எவ்வளவு நேரம் இருப்பேன் உங்களுக்கே தெரியும் என்றான், மேலும் மன்னா நீங்கள் கூறும் சும்மா வேறு நான் இருந்த சும்மா வேறு,

சும்மா இருத்தல் சுகமே - ஆயினும்
எல்லார்க்கும் வாய்க்காது அது ! .

என்று சும்மா இருத்தலை உணர்த்திவிட்டு இதோ கிளம்பி விட்டான் அவன் (தண்டனை பெறாமல்).

ஒரு நாள் ஒரு வேலை உணவு உண்ணாமலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் கூட த்யானம் செய்வதை மறக்காதே என்றான் - பாரதி .

தவம் செய்வதால் வானவர் நாடு வழி திறந்திடுமே -என்றாள் அவ்வை தாய்.

பெரியோர் எல்லாம் வலியுறுத்தும் செயலை நாம் செய்யலாமே. அள்ளலாமே அவர்கள்அருளை.


சமர்ப்பணம் குருவடிக்கு.

No comments: